இலங்கை தொடர்பில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கைக்கான அச்சுறுத்தல் அளவை உயர்த்தியதுள்ளது.

அதன்படி இலங்கைக்கான விஜயத்துக்கு எதிராக 3 ஆம் நிலை பயண ஆலோசனையை அமெரிக்க பிரஜைகளுக்கு வழங்கியுள்ளது.

அத்துடன் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு மற்றும் சில மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா தனது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளது.