மீண்டும் முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி செயலகம்

சோசலிச வாலிபர் சங்கத்தினால் இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் தற்போது ஜனாதிபதி செயலக முன்றலை அடைந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு கோசங்களை எழுப்பி வரும் நிலையில், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.