உறவினர் வீட்டிலிருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசர்கேணி பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் இன்றையதினம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசர் கேணி பகுதியிலுள்ள உறவினரொருவரின் வீட்டிலேயே குறித்த இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பளை சோறன்பற்றை சேர்ந்த சுந்தரமூர்த்தி கோபிதாஸ் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.