தென்னிந்தியத் திரையுலகில் அடுத்த அதிர்ச்சி…. திடீரென்று உயிரிழந்த பிரபல நடிகை!

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையான கே. பி. ஏ. சி. லலிதா இயற்கை எய்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவருக்கு, வயது 73. இவர் காதலுக்கு மரியாதை (1997), அலைபாயுதே (2000), காற்று வெளியிடை (2017) போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

குறிப்பாக, காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை சாலினியின் தாயாக நடித்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.

இவர் கேரளாவில் ஒரு முக்கிய இடதுசாரி நாடக குழுவாக இருந்த கே. பி. ஏ. சியில் (கேரள மக்கள் கலைக் கழகம் – kerala people Arts club) சேர்ந்தார்.

கேரளாவில் பொதுவுடைமை கருத்துக்களை பரப்புவதில் இந்த அரசியல் அரங்கம் மிகவும் செல்வாக்கு செலுத்தியது. மேலும், இவருக்கு “லலிதா” என்ற திரைப் பெயரும் வழங்கப்பட்டது.

பின்னர் இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியபோது, லலிதா என்று அழைக்கப்படும் மற்றொரு நடிகையிடமிருந்து வேறுபடுவதற்காக கே. பி. ஏ. சி என்ற குறிச்சொல் இவரது திரைப் பெயரில் சேர்க்கப்பட்டது.

இவர் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் கலைபடைப்புத் திறனுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இரண்டு சிறந்த திரைப்பட துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

மேலும், கேரள அரசின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.

கல்லீரல் பிரச்னை தொடர்பாக லலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். மேலும், கட்டுப்பாடற்ற நீரிழிவு பாதிப்பும் அவருக்கு இருந்து வந்தது. சில மாதங்களுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக கூறப்பட்ட நிலையில், இன்று இயற்கை எய்தினார்.