தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சாணக்கியன் விடுத்துள்ள கோரிக்கை!

இனத்துக்காக போராடிய தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் நிம்மதியாக உறங்கவாவது விடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று கொலை செய்து, கற்பழித்து, களவெடுத்த குற்றத்தில் சிறைத்தண்டனை பெறும் கைதிகளுக்காக சபையில், இன்று பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.