பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்

இலங்கையில் தற்போது கோவிட் தொற்று நிலைமையானது அதிகரித்து வரும் நிலையில் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கோவிட் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான ஆதாரம் இல்லாமல் பொது இடங்களுக்குள் நுழைய மக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையானது எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.