மட்டக்களப்பில் அதிசயம்

மட்டக்களப்பில் அமைந்துள்ள மாதா ஆலய கட்டிடத்தில் அதிசயம் நிகழ்ந்துள்ள நிலையில் ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளதாக தகவல்கள் தெவிக்கின்றன.

மட்டக்களப்பு லூர்த்து அன்னை ஆலய கட்டிடத்திலேயே இவ்வாறு மாதாவின் முகம் போன்ற அமைப்பு தோன்றியதாக கூறப்படுகின்றது.

இன்றையதினம் இந்த அதிசய நிகழ்வு இடம்பெற்றுள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்நிலையில் ஆலயத்தில் தோன்றிய மாதாவின் முகத்தை காண்பதற்கு பெருமளவு மக்கள் அங்கு சென்றுவருவதாகவும் கூறப்படுகின்றது.