நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலையில் சிறிதளவான மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும் ஏனைய பகுதிதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.