அதிக விலைக்கு சீமெந்து விற்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அரசாங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த 85க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிஏஏ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பல பிரதேசங்களில் அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான புகார்களை சிஏஏ தலைமை அலுவலகம் அல்லது அதன் மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்பலாம் என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.