குழாயடி சண்டை போல் தள்ளிக்கொண்டு மோசமாக சண்டை போட்ட பிரியங்கா, தாமரை…

பிக்பாஸ் 5வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்த சீசனில் தான் அதிகம் பெண்கள் பங்குபெற்றார்கள்.

ஆனால் பெண்களே அதிகம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள். கடந்த வாரம் மட்டும் வருண் மற்றும் அக்ஷாரா என இரண்டு பேர் எலிமினேட் ஆனார்கள்.

இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது, அதில் டிக்கெட் டூ பைனலுக்கான போட்டி நடக்கிறது.

இந்த போட்டியில் பிரியங்கா மற்றும் தாமரை இருவரும் தள்ளிமுட்டி மோதிக் கொண்டு பயங்கரமாக சண்டை போடுகிறார்கள்.

புரொமோவில் பாவ்னி தனியாக வந்து அழுகிறார், இதனை பார்த்த ரசிகர்கள் இன்றைய நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.