11 வயது சிறுமியின் விபரீத காதல்

புதிய காதலனுடன் ஓடிச்சென்ற சிறுமி, அவருடன் எடுத்த புகைப்படத்தை பழைய காதலனிற்கு வட்ஸ்அப்பில் அனுப்பிய நிலையில் பொலிசாரிடம் குறித்த ஜோடி ஒன்று சிக்கியுள்ள சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 11 வயதான சிறுமி ஒருவர், ஒரு வார விடுமுறைக்காக தினியாவல பிரதேசத்தில் உள்ள தனது சித்தியின் வீட்டில் தங்கியிருந்த போது அங்கு பொருட்களை ஏற்றி வந்த 20 வயதுடைய இளைஞனுடன் அறிமுகம் ஏற்பட்டு உடனே தொலைபேசி இலக்கங்களை பரிமாறியுள்ளனர்.

குறித்த சிறுமி விடுமுறையின் பின்னர் ஹோமாகம திரும்பிய பின்னரும் அவர்களிற்குள் தொலைபேசியில் காதல் மலர்ந்தது.

இதனையடுத்து இருவரும் தனிக்குடித்தனம் செல்லலாமென இளைஞன் வழங்கிய ஆலோசனையை அடுத்து, சிறுமி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், சிறுமியின் பெற்றோர் கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து, அந்த பகுதியிலுள்ள சிசிரிவி கமராக்களை பொலிசார் ஆய்வு செய்தனர். அதில், காதல் ஜோடி முச்சக்கர வண்டியொன்றிலும், சொகுசு பேருந்திலும் பயணம் செய்வது தெரிய வந்தது.

முச்சக்கர வண்டி அடையாளம் காணப்பட்டு சாரதியிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். இதேவேளை சிறுமியின் பெற்றோர் மற்றொரு தகவலையும் பொலிசாரிடம் தெரிவித்திருந்தனர்.

அதாவது சிறுமிக்கு முன்னர் இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பு இருந்ததாகவும், இதை அறிந்ததும், கண்டித்ததாகவும் தெரிவித்ததை அடுத்து, அந்த இளைஞனிடம் சென்று பொலிசார் விசாரணை நடத்தினர்.

பொலிசார் அங்கு சென்ற போது, அந்த இளைஞன் மிகவும் சோகமாக காணப்பட்டுள்ளார். பொலிசார் விசாரித்த போதுதான், அவரது முன்னாள் காதலி வேறொருவருடன் ஓடி விட்டார் என்பதே சோகத்தின் காரணமென்பது தெரிய வந்தது. மேலும் முன்னாள் காதலியான அந்த சிறுமி, புதிய காதலனுடன் செல்லும் போது, முன்னாள் காதலனை கடுப்பேற்றி விட்டே சென்றிருக்கிறார்.

அதாவது புதிய காதலனுடன் செல்பி படமொன்றை எடுத்து, அதை பழைய காதலனிற்கு அனுப்பி, ‘நாங்கள் போகிறோம்’ என்ற குறுந்தகவலையும் அனுப்பியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியின் புதிய காதலன் தினியாவல பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கஹதுடுவ பொலிசார் சந்தேக நபரின் வீட்டை சுற்றிவளைத்த போது, காதல் ஜோடி சிக்கியது. இந்நிலையில் கைதான 20 வயது காதலனும், அவரது தாயாருக்கு கைது செய்யப்பட்டு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிறுமி தனது வயதை 17 என கூறியதாலேயே, தான நம்பி காதலித்தேன் என இளைஞன் தெரிவித்துள்லதாக கூறப்படும் நிலையில் , சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.