நாட்டின் வானிலை மாற்றம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மாத்தறை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலும் சில 75 மில்லி மீற்றர் வரையில் ஓரளவு பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.