கொரோனோ தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பில் அதிரடி முடிவெடுத்த கூகுள்

கொரோனா தடுப்பூசி விதிமுறைகளை பின்பற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த தகவல் தொடர்பில் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சுற்றரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள், வரும் ஜனவரி 18-ம் திகதி முதல், 30 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும், அதன்பிறகு சம்பளம் இல்லாத விடுப்பில் 6 மாதங்களுக்கு வைக்கப்பட்டு, பின்னர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள், என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அதற்கான முறையான விண்ணப்பித்தல் மூலம் விலக்கு பெறலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.