நாட்டின் வானிலை மாற்றம்!

நாட்டின் அநேக பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டை அண்டிய பகுதிகளில் நிலவி வரும் தாழமுக்க நிலையினால் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பல பகுதிகளில் பிற்பகலில் 100 மில்லி மீற்றர் அளவிலான பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம் உண்டு எனத் தெரிவித்துள்ளது.