சுவிஸில் பெண்ணால் ஏற்ப்பட்ட பரபரப்பு!

சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் தனது சகோதரன் குறித்து ரகசியமாக கடிதங்களை அனுப்பி பொலிஸாரை எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Bremgarten மாகாணத்தில், Aargau canton-ல் உள்ள Hägglingen பகுதியில் உள்ள குடியிருப்பில் பரபரப்பான சூழல் நிலவியது.

கடந்த சில நாட்களாக அக்கம் பக்கத்தில் உள்ள அஞ்சல் பெட்டிகளில் வந்த கடிதத்தின் உள்ளடக்கம்தான் அந்த பரபரப்புக்குக் காரணம்.

அந்த கடிதத்தில் ஹெலன் டபிள்யூ. (Helen W.) எனும் பெண், சில மாதங்களுக்கு முன்பு Aargau கிராமத்திற்கு குடியேறி வந்துள்ள தனது சகோதரனைப் பற்றி எச்சரித்துள்ளார்.

அவரது கடிதத்தில், அவர் தனது சகோதரரை பெடோபிலியா (pedophilia) என்று குற்றம் சாட்டினார் மற்றும் பல சந்தர்ப்பங்களில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதனைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக தகவல் கொடுத்ததையடுத்து, சுதாரித்துக்கொண்ட Aargau canton பொலிஸார் அதிரடியாக ஹெலனின் சகோதரர் வீட்டுக்குள் நுழைந்து அவரை கைது செய்தனர்.

அதையடுத்து, ஹெலனின் குற்றச்சாட்டின் அடிப்படையில் RW என குறிப்பிடப்படும் அவரது சகோதரருக்கு எதிராக பாலியல் குற்றச்சட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இது குறித்து பேசிய ஹெலன், “எனக்கு இதில் முக்கிய விடயம் என்னவென்றால், இந்த துன்பம் இறுதியாக இத்தோடு நின்றுவிட்டது. என் சகோதரன் இதற்கு மேலும் ஒரு துன்பத்தை ஏற்படுத்த முடியாது” என்றார்.

தன் சகோதரனின் சுற்றுவட்டாரத்தில் மற்ற குழந்தைகளைப் போலவே தானும் சிறு வயதிலேயே தன் சகோதரனால் பாலியல் வன்முறைக்கு ஆளானேன் என்று குற்றம் சாட்டினார்.

அனால், விசாரணைக்கு பிறகு, வரம்புகள் சட்டத்தின் காரணமாக RW மீதான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

“ஹெலனின் கடுமையான குற்றச்சாட்டுகளை நிச்சயமாக, நாங்கள் பின்பற்றுகிறோம், இருப்பினும், RW இறுதியில், குற்றமற்றவர் என்ற அனுமானம் பொருந்தும். இது விழிப்புடன் கூடிய நீதியின் எல்லையாக உள்ளது, இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்” என காவல்துறை அதிகாரி Aline Rey கூறினார்.

மேலும், “உங்களிடம் ஏதேனும் கேள்வி இருந்தால், நீங்கள் அவரை நேரடியாக அணுக வேண்டும், பின்னால் பேச வேண்டாம். Hägglingen-க்கான அவரது நகர்வு RWக்கு ஒரு புதிய தொடக்கமாக இருக்க வேண்டும” என்று அவர் Aline Rey கூறினார்.

இதனையடுத்து RW தனது சகோதரியின் கடிதம் குறித்து பேசுகையில், “நான் இன்னும் வாழ ஒரு வாய்ப்பை வழங்குமாறு எனது சகோதரியையும் பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதற்கு பதிலளித்த ஹெலன் டபிள்யூ. தனது சகோதரரின் வழியில் எந்த தடையையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும், அவருடன் உரையாடலைக் கூட விரும்பவில்லை என்றும் கூறுகிறார்.

மேலும், தனது குற்றசாட்டுகள் குறித்த பின்வாங்காத ஹெலன், “மிக மிக நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக, நான் சரியானதைச் செய்கிறேன் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது” என்று கூறினார்.