ஓய்வூதியத்தில் விளையாடும் அரசாங்கம்…. சஜித் பிரேமதாஸ….!!

நாட்டு மக்களின் ஓய்வூதியத்தை கொள்ளையடிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக பல வருடமாக உழைத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல்கொடுப்பதாக எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 7 அறிவுள்ள நிதி அமைச்சரை நியமித்தது நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கு அல்ல என சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

நெதிகம்வல குடிநீர் திட்டத்தை பார்வையிடச் சென்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.