இந்தோனேசியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றன நிலையில் நேற்று இரவு திடீரென மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளது.
நேற்று இரவு 11.43 மணியளவில் இந்தோனேசியாவின் தீவு நகரான மலுகு மாகாணம் மலுகு டென்கரா பரட் மாவட்டத்தின் வடகிழக்கே 137 கிலோமீட்டர் தூரத்தில் 123 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின்போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்படுகின்றது. ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மாகாண பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.