கல்லறையில் இருந்து தீடிரென எட்டிப்பார்த்த விரல்கள்: வெளியான முக்கிய தகவல்!

லண்டனில் உள்ள கல்லறை ஒன்றிலிருந்து தீடிரென கைகள் எட்டி பார்த்ததால் அதனை கண்ட நபர் ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் காட்டு பகுதியை சுற்றி பார்க்க நபரொருவர் தனியாக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கல்லறையின் மேலிருந்து இறந்த உடலின் விரல்கள் வெளியே வரும் திகில் சம்பவத்தை தனது கண்களால் கண்டுள்ளார்.

பயத்தில் உறைந்து போன அந்த நபரால் குறித்த இடத்தை விட்டு கொஞ்சம் கூட அசைய முடியவில்லை. தன்னை என்னை நடக்கிறது என்பதை கண்ணை மூடி மெதுவாக யோசித்து பார்த்துள்ளார்.

பின்னர் கல்லறையில் இருந்து வெளியே தோன்றியது இறந்தவரின் விரல்கள் அல்ல. ஆனால் இறந்த மனிதனின் விரல்கள் போல் தோன்றும் பவள செடி என்பது தெரியவந்தது.

மேலும் அந்த செடியின் கிளைகள் தரையில் இருந்து கிழித்து கொண்டு வெளியே வரும் என்பதால் பார்ப்பதற்கு மனித உடல்களின் விரல் போல் பார்ப்பதற்கு இருக்கும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த பவளப்பாறை இறந்த மனிதனின் விரல்கள் என்று அழைக்கப்படுவதாகவும், ஹாலோவீன் வார இறுதியில் பலரை பயமுறுத்த Dead Man’s Fingers பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.