கனடாவில் இலங்கை தமிழரின் விபரீத முடிவு..!!

கனடாவில் அரசியல் தஞ்சம் நிகராகரிக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு உயிர்ழந்துள்ளார். கடந்த 12ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில் அவரின் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் நடைபெற்றன.

உயிரிழந்த நபர் கடந்த 2010ஆண்டு சண்சீ (sun sea) கப்பல் மூலம் கனடா சென்ற குறித்த நபர் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 11 வருடங்களாக கனடாவில் அகதி கோரிக்கை முன்வைத்த போதும் அரசினால் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றது.

தாயகத்தில் நடைபெற்ற போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், கனடாவில் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக மனவிரக்தியில் அவர் உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.