அமைதியாக இருந்த இலங்கை பெண் பிக்பாஸ் வீட்டில் செய்த திருட்டுத்தனம்

பிக்பாஸ் வீட்டில் இன்று லக்ஜுரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்ட சுவாரசியமான ப்ரொமோ காட் வெளியாகியுள்ளது.

கமல் தொகுத்து வழங்கம் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில் நமீதா உடல்நிலை சரியில்லாமல் கடந்த வாரம் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடியா சாங் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில் போட்டியாளர்கள் அட்டகாசமாக விளையாடியுள்ளனர். பிக்பாஸ் கொடுத்திருக்கும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூத காயினை பாதுகாக்க வேண்டுமாம்.

இதில் ஐக்கி பெர்ரி ஒரு காயினை எடுத்துள்ள நிலையில், இரண்டாவது வருண் நீர் என்ற காயினை எடுத்துள்ளார். மூன்றாவதாக இலங்கை பெண் மதுமிதா நிலம் காயினை தட்டித் தூக்கியுள்ளார்.

இந்த ப்ரொமோ காட்சியில் இதுவரை அமைதியாக இருந்த இலங்கை பெண்ணின் விளையாட்டை அவதானித்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.