நல்லூர் ஆலய நிர்வாகி காலமானார்

யாழ்ப்பணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் இன்று காலமானார்.

கடந்த 1929 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி பிறந்த குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார், தனது 92ஆவது வயதில் காலமானார்.

இதேவேளை இவர் 1964 டிசம்பர் 15 முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக பணியாற்றி கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.