மீண்டும் செம்பருத்தி சீரியலில் வருகிறார் கார்த்திக் ராஜ்

ஜீ தமிழில் செம்பருத்தி என்ற சீரியல் பெரிய ஹிட்டடித்த தொடர்.

நாயகன்-நாயகி திருமணம் வைத்தே பல எபிசோடுகளை ஓட்டிவிட்டார் இயக்குனர். கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா ஜோடி இந்த சீரியல் மூலம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.

இடையில் என்ன பிரச்சனை தெரியவிவ்லை ஆதியாக நடித்துவந்த கார்த்திக் ராஜ் சீரியலில் இருந்த வெளியேறினார், அதில் இருந்து சீரியல் கொஞ்சம் டல் அடிக்கத் தொடங்கியது என்றே கூறலாம்.

தற்போது செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது, இனி பழைய ஆதியை பார்க்கலாம்.

என்ன விஷயம் என்றால் வரும் திங்கட்கிழமை முதல் (அக்டோபர் 4) செம்பருத்தி சீரியல் முதல் எபிசோடில் இருந்து மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறதாம். காலை 8 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.