யாழ் கொடிகாமம் பகுதியில் ரவுடிக் கும்பலின் கத்திக்குத்திற்கு ஒருவர் இலக்காகி உள்ளார்

யாழ்.கொடிகாமம் – கரம்பகம் பகுதியில் வாகனத்தில் வந்த கும்பல் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.

வான் ஒன்றில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அப்பகுதியில் கரம்பகம் பகுதியை சேர்ந்தவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.