யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட 35 இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 35 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி, திண்ணை ஹொட்டலிலும், ஓட்டுமடத்திலுள்ள வீடொன்றிலும் இரண்டு பிறந்தநாள் நிகழ்வுகள் நடப்பதாக பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, அங்கு சென்ற பொலிசார், இரண்டு பிறந்தநாள் நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட சுமார் 35 வரையான இளைஞர்களை கைது செய்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.