கறுப்பு பூஞ்சையால் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம்!

கறுப்பு பூஞ்சை என்பது தொற்று நோய் அல்ல, அது சுற்றுச்சூழலில் காணப்படுகின்ற வைரஸ் மூலம் பரவக் கூடியது என்றும் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவானோர் இந்நோய்க்கு உட்படுவார்களாயின் அவர்கள் உயிரிழக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கறுப்பு பூஞ்சை நோய் நுரையீரலில் கூட ஏற்படக் கூடும்.

நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படுபவர்கள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படக் கூடும். எனினும் இது ஒரு தொற்று நோய் அல்ல. சுற்று சூழலில் காணப்படுகின்ற வைரஸ் ஊடாகவே இந்நோய் பரவும் என குறிப்பிட்டுள்ளார்.