இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் நிலநடுக்கம்

இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து 160 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1.33 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

எனினும் இவ் நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது