சின்னத்திரையில் இருந்து பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகள் வெள்ளித்திரைக்கு வருவது வாடிக்கையாக மாறிவிட்டது. அந்தவகையில், செய்தியாளராக இருந்து பின்னர் சீரியல் நடிகையாக மக்கள் மனதில் இடம் பெற்று வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.
தனது நடிப்புத் திறமையால் இவர் தற்போது வெள்ளித்திரையில் மிகப்பெரிய வெற்றியை கொண்டாடி வருகிறார். இந்த வருடம் பிரியா பவானி சங்கருக்கு சொந்தம் என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு பல படங்களில் நடிகை பிரியா பவானி சங்கர் கமிட்டாகியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து சிம்புவின் பத்து தல மற்றும் ஹரி இயக்கும் ஒரு திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
இத்தகைய சூழலில், அன்றாடம் போட்டோ ஷூட் நடத்திய தனது சமூக வலைதளப் பக்கங்களில் அதை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார் பிரியா பவானி சங்கர். தற்போது அவர் சல்வார் அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram