அவுஸ்திரேலியாவில் கொரோனா வேகமெடுத்துள்ளதையடுத்து ஊரடங்கு அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவில் கொரோனா தாக்கம் வேகமெடுத்துள்ளதையடுத்து அமுலில் உள்ள ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.

டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது. மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள போதிலும், கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. இந்தநிலையில் ஆஸ்திரேலியாவின் 2-வது மிகப்பெரிய நகரமான மெல்போர்னில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

70 லட்சம் மக்கள் தொகை கொண்ட மெல்போர்ன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே தொடர்ந்து 4 வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விக்டோரியா மாகாணத்தின் பிரதமர் டான் அஆண்ட்ரூஸ் கூறுகையில் ‘‘ஊரடங்கை திரும்ப பெற முடியாத அளவுக்கு மெல்போர்ன் நகரில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஊரடங்குக்கு முன்பான சுதந்திரத்தை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறோம். மீண்டும் அந்த நாட்கள் திரும்பி வர வேண்டும் என தீவிரமாக விரும்புகிறோம்’’ என கூறினார். இதற்கிடையில்அவுஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் 1,305 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்து.