நாட்டில் மேலும் சிலவற்றுக்கு தடை அமுலாக உள்ளது!

ஒருநாள் பாவனைக்கான பிளாஸ்டிக் குவளை உள்ளிட்ட 7 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருள்களை தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை(30) அமைச்சரவையில் முன்வைக்கப்படுகிறது.

இதன் கீழ், பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட கப்கள், கரண்டிகள், பானக் கோப்பைகள், கத்திகள், முட்கரண்டி ஆகியவற்றை தடை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் ஆகியவற்றால் செய்யப்பட்ட மளிகை பைகள் மற்றும் சிலிகான் பைகளும் இந்த அமைச்சரவை குறிப்பின் கீழ் தடை செய்யப்படுவதாக சுற்றுச்சூழல் அமைச்சுத் தெரிவித்துள்ளது.