யாழ்.மாவட்டத்தில் : மேலும் 105 பேருக்கும் கொரோனா உறுதி

யாழ்.மாவட்டத்தில் ஒரு வயதுக்குட்பட்ட இரு குழந்தைகள் உட்பட 105 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 46 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 27 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 04 பேர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 03 பேர், புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.