மட்டக்களப்பில் இடம் பெற்ற துயர சம்பவம்!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் வீட்டு சுற்று மதில் இடிந்து வீழ்ந்ததில் இளஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மண்டூர், முதலாம் பிரிவைச் சேர்ந்த பேரின்பநாயகம் பேணுஜன் வயது (18) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று இரவு தனது இரவு உணவை உண்டு விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று அதிகாலை வீட்டார் அவரின் வீட்டுக்கு பின்னால் உள்ள சுற்று மதில் பக்கம் சென்றபோது சுற்று மதில் உடைந்த நிலையில் கற்களுக்குள் சிக்குண்டு உயிரிழந்து காணப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவானின் உத்தரவில் சம்பவ இடத்துக்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் மற்றும் வெல்லாவெளி பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.