தாயின் பிரிவை தாங்க முடியாமல் மகள் தற்கொலை!

மட்டக்களப்பில் பதின்ம வயது யுவதி ஒருவர் தனது தாயை இழந்த வேதனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா, சில்லிக்குடியாறு கிராமத்தைச்சேர்நத பாக்கியராசா மாலினி எனும் 15 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த யுவதியின் தாயார் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் , தான் தனது தாயை இழந்துள்ளதாகவும் அதனால் தானும் தற்கொலை செய்யப்போவதாக நீண்ட நாட்களாக கூறிவந்த நிலையில் அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.