யாழ் மாவட்டத்தில் நேற்று 99 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ் மாவட்டத்தில் நேற்று 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று வெளியான முடிவுகளின் அடிப்படையில் பருத்தித்துறை சுகாதார பிரிவில் 28 பேருக்கும், கரவெட்டி சுகாதார பிரிவில் 30 பேருக்கும், உடுவில் சுகாதார பிரிவில் 21 பேருக்கும், யாழ் சுகாதார பிரிவில் 7 பேருக்கும், மருதங்கேணி சுகாதார பிரிவில் 2 பேருக்கும், காரைநகர் சுகாதார பிரிவில் 2 பேருக்கும், சாவகச்சேரி சுகாதார பிரிவில் 6 பேருக்கும், மயிலிட்டி தனிமைப்படுத்தல் பிரிவில் 3 பேருக்கும் என யாழ் மாவட்டத்தில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.