வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி முதல் சுற்றில் வெற்றி… வெளியான தகவல்!

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை வாள்வீச்சுக்கான முதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது.

இதில், பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நாடியா பென் அஜிசியும் மோதினர்.

இதில் பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.