வடக்கில் 2 கொரோனா மரணங்கள்! வெளியான தகவல்!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கொவிட் தொற்று நோயால் நேற்று மரணமடைந்துள்ளார்.

குறித்தநபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் மரணமடைந்துள்ளார்.

வவுனியா ஶ்ரீநகர்பகுதியை சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயதானவர் உயிரிழந்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் இதுவரை 118 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறப்பிடத்தக்கது.