போதைப்பொருளுடன் ஐவர் கைது!

காத்தான்குடி, மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுகளில் உள்ள பகுதிகளில் ஐஸ் ரக போதை பொருள் மற்றும் கஞ்சாவுடன் 5 பேரை இன்று கைது செய்துள்ளதாக அந்தந்த பிரதேச பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் காத்தான்குடி 6 ஆம் பிரிவு பாலமுனை பகுதியில் இன்று (20) பகல் 1,430 மில்லி கிராம் மற்றும் 490 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இருவரையும், 4,250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

அதேவேளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள நாவக்கேணி மற்றும் குமாரபுரம் பகுதியில் 100 மில்லி கிராம் கஞ்சாவுடன் ஒருவரையும் 24 மில்லி கிராம் கஞ்சாவுடன் ஒருவர் உட்பட இருவரை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.