மீண்டும் இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. ஒரே நாளில் 43 ஆயிரம் பேர் பாதிப்பு!

கொரோனா இரண்டாவது அலை தீவிர மடைந்து பல கட்டுப்பாடுகளுடனும், தடுப்பூசி, மாஸ்க் செலுத்திகொள்வதன் மூலமும் இந்தியாவில் கொரோனா வைரஸ் குறைந்து வந்தது.

இதையடுத்து, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 43 ஆயிரத்து 393 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 52 ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 911 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 939 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 36 கோடியே 89 லட்சத்து 91 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வரும் நாட்களில் கொரோனா மூன்றாவது அலை பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.