மனைவி தன்னுடைய தந்தையோடு தகாத உறவில் ஈடுபட்டதை பார்த்து விட்ட கணவன் இருவரையும் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கோகலஹார் கிராமத்தில் சந்தோஷ் லோதி(35) என்பவர் வசித்து வருகின்றார்.
இவர் தனது தந்தை அமன் லோதி(65) மற்றும் மனைவி கவிதா ஆகியோருடன் ஒரேவீட்டில் வசித்து வந்த நிலைியல், அடிக்கடி வேலை விடயமாக வெளியே செல்வதால் தந்தையின் பாதுகாப்பில் மனைவியை விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் தந்தைக்கும், மனைவிக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அக்கம் பக்கத்தினர் சந்தோஷிடம் கூறியும் அவர் நம்பவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியூர் சென்று விட்டு சந்தோஷ் வீடு திரும்பிய போது, தனது மனைவியுடன் தனது தந்தை தனிமையில் இருந்ததை அவதானித்துள்ளார்.
உடனே கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சந்தோஷ் இருவரையும் அருகில் இருந்த கோடாரியை எடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
பின்பு உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில்,வீட்டு வாசலில் ரத்தக்கரையுடன் அமர்ந்திருந்த சந்தோஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவரது மனைவி மற்றும் தந்தையின் சடலத்தை பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.