வியக்க வைத்த இலங்கை வீரரின் பந்துவீச்சு! கடைசி ஓவரில் ஏற்பட்ட திருப்பம்…

பாபர் அசாம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான திசர பெரேரா கராச்சி கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் எடுத்தது.

துடுப்பாட்டத்தில் ரில்லி ரூஸோ 24 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 44 ரன்களை அதிரடியாக குவித்தார்.

பந்துவீச்சில் திசர பெரேரா 3 ஓவர்கள் பந்து வீச்சில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது பந்துவீச்சு ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தமை அனைவரையும் வியக்கவைத்தது.

177 ஓட்டங்கைள வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்களை பெற்று 12 ரன்களில் தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியின் கடைசி ஓவரில் 23 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவையென்ற நிலையில் களமிறங்கிய திசர பெரேரா ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்ததுடன், பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 84 ரன்களும் வீணானது.

போட்டியின் நாயகனாக ரில்லி ரூஸோ தேர்வு செய்யப்பட்டார்.