உருமாறிய புதிய கொரோனா கண்டுபிடிப்பு.. காற்றில் பரவும் தன்மை கொண்டது.!

கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது 200 உலக நாடுகளில் பரவிய இந்த வைரஸ், தற்போது உருமாறி வருகிறது. உருமாறிய வைரஸ் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வியட்நாம் நாட்டின் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வைரஸ் அதிக வீரியம் மிக்கது. அது காற்றிலும் பரவும் தன்மை கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் நகுயென் தன் லாங் கூறியதாவது, புதிய உருமாறிய புதிய கொரோனா வைரஸ் ஒன்றை கண்டுபிடித்து உள்ளோம்.

இது அதிக வீரியம் மிக்க வைரஸ் ஆகும். இது இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய வைரஸ்களின் கலப்பினம் ஆகும். இதன் தனித்தன்மை என்னவென்றால் இது காற்றில் வேகமாக பரவக்கூடியது. திரவத்தில் இந்த வைரசின் செறிவு வேகமாக அதிகரிக்கிறது. சுற்றுச்சூழலிலும் வலுவாக பரவுகிறது என தெரிவித்துள்ளார்.