யாழ்ப்பாணத்தில் தொற்றிற்குள்ளான பெண் பிரசவித்த சிசுவிற்கும் தொற்று!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாயொருவர் பிரசவித்த குழந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த கர்ப்பிணிக்கு சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிரசவமானது. இந்நிலையில் அவர் பிரசவித்த குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை, அண்மையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை விடுதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கு 21 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.