நல்லுார் அரசடிப்பகுதி முடக்கப்படுகின்றது… வெளியான தகவல்!

நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான அரசடியை
தனிமைப்படுத்துவதற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர் ஊடாக
கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார
மருத்துவ அதிகாரியினால் கோரிக்கை முன்வைக்கட்டுள்ளதாக அறிய முடிகிறது.

நல்லூர் அரசடியில் கடந்த ஒரு வாரத்தில் 22 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதனால் அரசடியில் வசியும் மக்களை சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதியை
முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.