5 வைத்தியர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா…..

மாரவில ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் உள்பட 20 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

மாரவில ஆதார வைத்தியசாலையின் 20 ஊழியர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையில் 5 வைத்தியர்கள் மற்றும் 08 தாதியர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 5 வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்களும் மற்றும் 2 குடும்ப நல ஊழியர்களும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.