பி.எஸ்.என்.எல் மொபைல் எண்ணில் Do Not Disturb சேவையை செயல்படுத்துவது எப்படி?

தேவையற்ற அழைப்புகளைக் கட்டுப்படுத்த, அனைத்து தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களும் Do Not Disturb சேவைகளை வழங்குகின்றனர். விளம்பரதாரர்களிடமிருந்து தேவையற்ற அழைப்புகள் அல்லது செய்திகளை நிறுத்த இந்த Do Not Disturb சேவை வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது.

இதேபோல், அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தனது வாடிக்கையாளர்களுக்கும் ஸ்பேம் அழைப்புகள் அதை தடுக்க DND சேவைகளை வழங்குகிறது.

தொலைத்தொடர்பு ஆபரேட்டர் டெல்லி மற்றும் மும்பை தவிர அதன் சேவைகள் 20 வட்டங்களில் இந்தியா முழுவதும் வழங்கி வருகிறது. இருப்பினும், டெல்லி மற்றும் மும்பை வட்டங்களில் எம்டிஎன்எல் சேவைகளைப் பயன்படுத்த பயனர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் DND சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு உதவவே இந்த பதிவு.

எஸ்எம்எஸ் வழியாக பிஎஸ்என்எல் DND சேவையைப் பெறுவதற்கான வழிமுறை:

ஸ்பேம் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்புகளைத் தடுக்க நீங்கள் 1909 க்கு “START 0” என்று SMS அனுப்ப வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகையிலான விளம்பரங்களை மட்டும் நிறுத்த விரும்புகிறீர்கள் என்றால், “START (விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுங்கள்)” அல்லது “START 1” என்ற செய்தியை 1909 எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

உங்கள் மொபைல் எண்ணில் அனைத்து விளம்பர அழைப்புகள் மற்றும் செய்திகளைப் பெற DND சேவையை Deactivate செய்ய விரும்புகிறீர்கள் என்றால், 1909 என்ற எண்ணுக்கு நீங்கள் STOP என்று SMS அனுப்ப வேண்டும். சேவைகளை நிறுத்த 1909 எண்ணை அழைக்கவும் உங்களுக்கு அனுமதி உண்டு.