ஜெர்மனி மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய பெண்; 4 பேர் பலி!

ஜெர்மனி போட்ஸ்டம் நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய 51 வயதான பெண் ஊழியர் ஒருவர், நோயாளிகளிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

அவர், அங்கு சிகிச்சை பெற்றுவந்த 5 பேரை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து நிகழ்விடத்திற்குவந்த போலீசார், அப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.தாக்குதலுக்கான காரணம் தெரியாத நிலையில் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.