கொரோனா பரவல்… ஆஸ்கர் விருதுகளில் இந்த ஆண்டும் நடக்கும் மாற்றம்!

கடந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 25 ஆம் தேதி நடக்க உள்ளது.

கொரோனா காரணமாக ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடக்க உள்ளது. இதனால் விருது பெறுபவர்கள் மட்டும் மேடைக்கு வந்து விருது குறித்து பேசுவார்கள் என சொல்லப்படுகிறது.