இளைஞரின் ஆசை வார்த்தையை நம்பிய கல்லூரி மாணவி… நேர்ந்த விபரீதம்

திருவள்ளூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நகர், ஏ.கே.என்.அவென்யூ பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (27). இவர் கண் கண்ணாடி கடை வைத்து தொழில் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு அயத்தூர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான 24 வயதுடைய பெண்ணை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு விக்னேஸ்வரன் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ள நிலையில், குறித்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.

மேலும் கர்ப்பத்தைக் கலைப்பதற்கு விக்னேஷ் மாத்திரை வாங்கிக்கொடுத்து கலைக்கவும் செய்துள்ளார். பின்பு ஒரு கட்டத்தில் அப்பெண்ணை விட்டுவிடடு வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்கு முடிவும் எடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பெண் நேற்று திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து, விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.