ஜானதிபதியிடம் கையளிக்கப்பட்டது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை இன்று மாலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப் பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக் கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15 ஆம் திகதி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப் படைக்கப்படவிருந்த நிலையில், மேலதிக பரிசீலனைக்காக அமைச் சரவை குழு இரண்டு வார கால அவகாசத்தினை பெற்றிருந்தது.

இதற்கமைய குறித்த அறிக்கை இன்று மாலை ஜனாதிபதியிடம் கைய ளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரி குப்த ரோஹணதீர தெரிவித்துள்ளார்.