2 வயது ஆன பிறகு முதன்முறையாக தங்களது இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகர் பிரஜன்

90களில் இருந்த பிரபலங்கள் பலரை நம்மால் மறக்க முடியாது. அப்படி ஒரு பிரபலம் தான் தொகுப்பாளர் பிரஜன்.

ஒரு இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் இருந்தது. அதில் இருந்து அப்படியே சீரியல் பக்கம் வந்தார், அங்கேயும் வரவேற்புகள் நன்றாக இருந்தது.

பிரஜன் ஒரு படி மேலே போய் படங்களில் வாய்ப்பு தேடும் பணியில் இறங்கினார், ஆனால் அவருக்கு ஏற்றார் போல் ஒரு படமும் அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

இடையில் சீரியல் நடிகையான சான்ட்ராவை காதலித்து திருமணம் செய்தார். பின் சீரியல் பக்கம் மீண்டும் வந்த அவர் சின்னதம்பி என்ற சீரியலில் நடித்து வந்தார், அது முடிய இப்போது அன்புடன் குஷி என்கிற சீரியலில் நடிக்கிறார்.

கடந்த வருடத்திற்கு முன் பிரஜன்-சான்ட்ராவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தார்கள், அவர்களின் இரண்டாவது பிறந்தநாளை அவர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

தற்போது முதன்முறையாக 2 வயது ஆன தங்களது இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சான்ட்ரா.