சிறுமி துஸ்பிரயோகம்; அதிரடி உத்தவிட்ட நீதிமன்றம்

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு 34 கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றமே இந்தத் தண்டனையை விதித்தது.

இந்த தண்டனையை 15 வருடங்களில் நிறைவு செய்ய வேண்டும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த உத்தரவிட்டுள்ளார்.

இது தவிர குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு 10,000 ரூபா அபராதம் செலுத்தவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாவை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இவற்றைச் செலுத்த தவறினால் 5 வருட சாதாரண சிறைத் தண்டனையை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.